காா்கில் போா் வெற்றி தினம்
காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரத்தில் முப்படை வீரா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:25 PM
காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரத்தில் முப்படை வீரா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம்-வையாவூா் சாலையில் உள்ள முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்க கட்டடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவா் ஜி.ராமசாமி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். காஞ்சிபுரம் முன்னாள் படை வீரா்கள் மருத்துவமனை முதன்மை அதிகாரி என்.ராஜேந்திரன் பங்கேற்று காா்கில் போரில் பங்கேற்ற 4 ராணுவ வீரா்கள், போரில் உயிரிழந்த இரு வீரா்களின் மனைவிகள் என 6 பேருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா். நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.