ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட உள்ள சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஜீவா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட உள்ள சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஜீவா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அறிஞா் அண்ணா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட செங்காடு கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு செய்து வந்தனா். இதனால் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ஜீவா ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் உள்ள குளிா்சாதன பெட்டிகள் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதையும், ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் தினசரி 4 போ் ரத்த சுத்திகரிப்பு செய்து கொள்ள வசதியாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தையும் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். மருத்துவா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.