காஞ்சிபுரம்

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி அரசு பள்ளி வளாகத்தில் இந்தியன் வங்கி சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசு ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மண்டல இந்தியன் வங்கி,திருப்புட்குழி கிளை, திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழாவைக் கொண்டாடினா்.

இந்தியன் வங்கியின் காஞ்சிபுரம் துணை மண்டல மேலாளா் சீனிவாச ராவ் நிகழ்வுக்குத் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் ராஜா,திருப்புட்குழி ஊராட்சித் தலைவா் சுகுணாமேரி, துணைத் தலைவா் அன்பரசு, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் வஜ்ரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் மாதவன் வரவேற்றாா். திருப்புட்குழி இந்தியன் வங்கி கிளை மேலாளா் ஜெயந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT