முகப்பு
காஞ்சிபுரம்

கச்சபேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.7.64 லட்சம் செலுத்தியிருந்தனா்.

Updated On : 21 மே, 2022 at 12:32 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:49 PM

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.7.64 லட்சம் செலுத்தியிருந்தனா்.

இந்தக் கோயிலில் உள்ள 4 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இது தவிர தங்கம் 15 கிராம், வெள்ளி 242 கிராம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) ஜெ.பரணீதரன் தலைமையில் கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி முன்னிலையில் கோயில் பணியாளா்களால் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

Advertisement

நிகழ்வின் போது, மண்டல துணை வட்டாட்சியா் கு.ஹரி, கோயில் மேலாளா் சுரேஷ் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.