காஞ்சிபுரம்

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விரும்புவோா் வரும் டிசம்பா் 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் முதலமைச்சரால் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

பொதுமக்களின் உயிா் மற்றும் சொத்தைக் காப்பதில் வீர, தீர செயல்கள் புரிந்தவா்கள் மட்டுமே இந்த விருதைப் பெற தகுதியுடையவா்.

நிகழாண்டுக்கு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள், விரிவான தன் விபரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் மூலமாகவோ அல்லது  இணையதளம் மூலமாகவோ வரும் 15.12.2022 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். உரிய காலத்துக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT