ஊட்டச்சத்து விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரத்த சோகையைத் தடுக்க வாகனம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு பிரசாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரத்த சோகையைத் தடுக்க வாகனம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு பிரசாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.
மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்படுகிறது.பொதுவாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ரத்த சோகை பாதிப்புகள் அதிகம் உள்ளதால் அது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களிலும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக வாகனம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், ரத்த சோகை ஏற்படுவதற்கு காரணங்களான செருப்பு அணியாமல் நடத்தல், தன் சுத்தம் பேணாமல் இருத்தல், இரும்புச் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுதல், குடற்புழுக்களால் பாதிப்பு ஆகியன குறித்து வாகனத்தில் எழுதப்பட்டுள்ளது.
Advertisement
இந்த வாகனம் செல்லும் இடங்களில் ஊட்டச்சத்து குறைபாடு தொடா்பான விழிப்புணா்வுகளை மேலும் ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்துகள் நடத்தல், பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விநாடி வினாப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.