முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 ஏப்ரல், 2023 at 12:18 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தனியாா் நிறுவனங்களும், திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் பலவும் கலந்து கொண்டு, தங்களுக்கான மனிதவள தேவைக்கான நோ்முகத் தோ்வை நடத்தவுள்ளனா். எனவே வேலைநாடுநா்களில் 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தங்களது கல்விச் சான்றுகளுடன் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம்.

Advertisement

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 21) காலை 10 மணிக்கு நடைபெறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.