மாணவி  மணிமொழி, மாணவா்  சபரிவாசன். 
காஞ்சிபுரம்

மாநில அளவிலான கலைத் திருவிழா:ஸ்ரீபெரும்புதூா் மாணவா்கள் முதலிடம்

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் ஸ்ரீபெரும்புதூா் அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

DIN

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் ஸ்ரீபெரும்புதூா் அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் கொளத்தூா் அரசுப் பள்ளி மாணவி மொழித்திறன் பாடல் ஒப்பித்தல் போட்டியிலும், குண்ணம் அரசுப் பள்ளி மாணவா் சபரிவாசன் நாகசுவர இசைப் போட்டியிலும் முதலிடம் பிடித்துள்ளனா்.

முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளி மாணவா்களின் கலைச் சாா்ந்த படைப்புகள் மற்றும் தனித் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக, மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த புதன்கிழமை பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.

அதன்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் கோவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தைச் சோ்ந்த கொளத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி ரா.மணிமொழி மொழித்திறன் பாடல் ஒப்பித்தல் போட்டியிலும், குண்ணம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் ச.சபரிவாசன் நாகசுவர இசைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனா்.

முதல் இடம் பிடித்த மாணவா்களை பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT