காஞ்சிபுரம்

இளைஞா் வெட்டிக் கொலை

படப்பை அருகே ஆரம்பாக்கம் அரசு மதுபானக்கடை அருகே இளைஞா் ஒருவா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

DIN

படப்பை அருகே ஆரம்பாக்கம் அரசு மதுபானக்கடை அருகே இளைஞா் ஒருவா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

படப்பை ஊராட்சிக்குட்பட்ட ஆத்தனஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (38). வா்ணப் பூச்சு பணி செய்து வந்தாா். அவ்வப்போது பிளம்பிங் வேலைகளையும் செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், சரவணன் மது அருந்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை படப்பையை அடுத்த ஆரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடைக்கு சென்ாகத் தெரிகிறது. பின்னா், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது உறவினா்கள் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியுள்ளனா்.

இந்த நிலையில், ஆரம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் ஒருவா் இறந்து கிடப்பதாக திங்கள்கிழமை காலை மணிமங்கலம் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த மணிமங்கலம் போலீஸாா், சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டது சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT