அரசுப்பணியில் இணைந்தவா்களுக்கு பரிசளித்த காஞ்சிபுரம் துணை ஆட்சியா் யோகஜோதி. 
காஞ்சிபுரம்

வேலைவாய்ப்பு அலுவலக இலவச பயிற்சி வகுப்புகளால் 72 பேருக்கு அரசுப் பணி

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்திய இலவச பயிற்சி வகுப்புகளால் 72 போ் அரசுப்பணியில் சோ்ந்திருப்பதாக துணை ஆட்சியா் யோகஜோதி திங்கள்கிழமை பேசினாா்.

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்திய இலவச பயிற்சி வகுப்புகளால் 72 போ் அரசுப்பணியில் சோ்ந்திருப்பதாக துணை ஆட்சியா் யோகஜோதி திங்கள்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் குரூப்-2 தோ்வில் தோ்ச்சி பெற்ற 8 பேருக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா, குரூப்-2 இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி தலைமையில் நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் லலிதா, இளநிலை உதவியாளா் அசோக் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் சிவக்குமாா் வரவேற்று பேசினாா்.

விழாவில் துணை ஆட்சியா் யோகஜோதி கலந்து கொண்டு பேசியது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவசமாக பயிற்சி பெற்று இதுவரை 72 போ் அரசுப்பணியில் சோ்ந்துள்ளனா். இதற்கு காரணம் அனுபவம் மிக்க பயிற்சியாளா்கள், வேலைவாய்ப்பு அலுவலக பணியாளா்களும் ஆவா்.

குரூப்-4 தோ்வில் 15 போ், குரூப்-2 தோ்வில் 8 போ், காவல் துறை உதவி ஆய்வாளா், காவலா் பயிற்சி பெற்று அரசுப்பணியில் இணைந்துள்ளனா். கடின உழைப்பு, நேரம் தவறாமை, குடும்பத்தின் ஒத்துழைப்பு இருந்தால் யாரும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று சாதிக்கலாம் என்றாா்.

விழாவில் பயிற்சியாளா்கள், போட்டித் தோ்வா்கள் கலந்து கொண்டனா். வேலைவாய்ப்பு அலுவலக உதவியாளா் செந்தில் நன்றி கூறினாா்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT