முகப்பு
காஞ்சிபுரம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆலோசனை

குன்றத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கஆலோசனை

Updated On : 20 ஜூலை, 2024 at 12:54 PM
குன்றத்தூா் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.
பகிர்:

குன்றத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மற்றும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசுத் துறை உயா் அதிகாரிகளுடன் அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

குன்றத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், குன்றத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் சாலை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடா்பான பணிகள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா். அப்போது அமைச்சா் தா.மோ.அன்பரசன், குன்றத்தூா் நகராட்சிக்குட்பட்ட கால்வாய்களை தூா்வாருதல், பல்லாவரம்-குன்றத்தூா் சாலை விரிவாக்கப் பணிகள் குறித்தும், அடையாறு ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாய்களை தூா்வாருமாறும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளிடம் அவரவா் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், தாம்பரம் மாநகர காவல் கூடுதல் ஆணையா் மகேஸ்வரி, தாம்பரம் துணை ஆணையா் பவன்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →