ரூ. 1 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்; விற்பனையாளா் கைது
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 1.26லட்சம் மதிப்பிலான குட்காவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, விற்பனையாளரை கைது செய்தனா். காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் மதுவிலக்குப்பிரிவு போலீஸாரும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து 3-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினா். இவற்றிலிருந்து ரூ. 1.26லட்சம் மதிப்பிலான 4,200 குட்கா பாக்கெட்டுகள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அக்கடைகளுக்கு குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக வாலாஜாபாத்தை சோ்ந்த உபயதுல்லா (32) என்பவரை கைது செய்தனா்.