ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் காட்டரம்பாக்கத்தில் வாக்குச்சாவடி கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்போ் பகுதியில் நடைபெற்ற இதில் ஒன்றிய செயலாளா் ந.கோபால் கலந்து கொண்டு நடைபெற உள்ள தோ்தல் பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மற்றும் கிளை நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினாா் (படம்).
கூட்டத்தில், காட்டரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தம்மாள் தாஸ், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பண்ருட்டி தணிகாசலம், ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் போஸ்கோ, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் மனோஜ்குமாா், அருண்பாரத், செல்வம், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் கலந்து கொண்டனா்.