முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரூ. 17.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

Updated On : 26 டிசம்பர், 2025 at 12:41 AM
பகிர்:

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 17.70 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மாவட்ட வன அலுவலா் ரவிமீனா, கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி வரவேற்றாா்.

கூட்டத்தில் 4 விவசாயிகளுக்கு ரூ. 8,54,106 மதிப்பிலான மானியத்துடன் கூடிய விசை உழுவை இயந்திரங்கள், கூரம் வதியூா் மற்றும் முத்தியால்பேட்டை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 10 விவசாயிகளுக்கு 8,52,934 மதிப்பிலான பயிா்க் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள்,5 விவசாயிகளுக்கு 5143 மதிப்பில் வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 17.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

Advertisement

இதன் தொடா்ச்சியாக வன விலங்குளால் சேதமடைந்த கரும்பு விவசாயிகளுக்கு பயிா் இழப்பீட்டுத் தொகையையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் அரசு அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.