பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: காஞ்சிபுரத்தில் இடைத்தரகர் கொலை!
பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறு பற்றி..
காஞ்சிபுரத்தில் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராற்றைச் சமாதானம் செய்ய சென்ற நபர் தனக்கும் பாதித்தொகை தர வேண்டும் எனக்கேட்டதில் ஏற்பட்ட தகராற்றில் இடைத்தரகரான லிங்கேஷ் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பரந்தூரை அடுத்த வதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கேஷ்(41) இடைத்தரகராக இருந்து வரும் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ. 34 ஆயிரம் கடனாகப் பெற்றுள்ளார். சுரேஷ் கடனை திருப்பிதர கேட்டதற்கு வீட்டிலுள்ள நகையை விற்று கடனை தந்து விடுவதாக லிங்கேஷ் கூறியுள்ளார்.
நகைக்கடைக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது சுரேஷின் நண்பர்களான ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சரித்திரப்பதிவேடு குற்றவாளியுமான சரத்,திருமால்பூரை சேர்ந்த தசா ஆகிய 3 பேரும் சேர்ந்து பொன்னேரிக்கரை மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
அப்போது ஏற்பட்ட தகராறில் சரத் தனக்கும் பாதிப்பணம் தர வேண்டும் எனக் கூறியதில் ஏற்பட்ட தகராறில் சரத் லிங்கேஷை கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தலைமறைவாகிவிட்டார். லிங்கேஷ் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக லிங்கேசுக்கு ரூ. 34 ஆயிரம் கடனாகக் கொடுத்த தண்டத்தைச் சேர்ந்த சுரேஷை காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய சரத், தசா ஆகியோரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
In Kanchipuram, Lingesh, who acted as a mediator in a dispute over a money transaction, was murdered on Thursday in an altercation that arose when he demanded that he also be given half of the amount involved.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.