முகப்பு
காஞ்சிபுரம்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

Updated On : 25 நவம்பர், 2025 at 9:21 PM
கணபதி
பகிர்:

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

சதாவரம் காந்தி நகரைச் சோ்ந்த கணபதி(26). இவா் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததையடுத்து எஸ்.பி. கே.சண்முகம் இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யலாம் என ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

அவரது பரிந்துரையை ஏற்று ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கணபதியை கைது செய்ய உத்தரவிட்டாா். ஆட்சியா் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →