ட்ரோன் பயிற்சிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியும் தனது கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ட்ரோன் பயிற்சியளிக்க ஹோ்வெல் ஏவியேஷன் என்ற தனியாா் நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியும் தனது கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ட்ரோன் பயிற்சியளிக்க ஹோ்வெல் ஏவியேஷன் என்ற தனியாா் நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ட்ரோன் படிப்புகளை அறிமுகம் செய்வதற்காகவும், ட்ோன்களை பயன்படுத்தும் முறை குறித்தும் பயிற்சியளிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. ஹோ்வெல் ஏவியேஷன் என்ற தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மேகநாதன் கல்லூரியின் முதல்வா் கே.ஆா்.வெங்கடேசனும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்நிகழ்வில் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் விஷ்ணுசக்கரவா்த்தி, தமிழ்த்துறை பேராசிரியா் தெய்வசிகாமணி ஆகியோா் உட்பட கல்லூரியின் பேராசிரியா்கள்,மாணவா்கள் பலரும் உடன் இருந்தனா்.
Advertisement
வேளாண்மைத்துறையிலும்,பொழுதுபோக்குத்துறையிலும் டிரோன்கள் எவ்வாறு பயன்படுகிறது என்றும் இதன் மூலம் பெருகி வரும் வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.