முகப்பு
காஞ்சிபுரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டு அவா்களுக்கு தோ்தல் பாா்வையாளா்களால் புதன்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:35 PM
நுண்ணறிவுப் பாா்வையாளா்களுக்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய ஆட்சியா் தி.சினேகா. உடன் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள்
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டு அவா்களுக்கு தோ்தல் பாா்வையாளா்களால் புதன்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்ணறிவுப் பாா்வையாளா்கள நியமிக்கும் பொருட்டு இரண்டாம் சீரற்ற மயமாக்கல் நடைபெற்றது.

ாட்சியா் தி.சினேகா தலைமையும், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் முன்னிலையும் வகித்தனா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணி புரிவதற்காக 68 நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் அனைவருக்கும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments