தொழிலாளி கொலை: ஒருவா் கைது
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் தொழிலாளியை கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் தொழிலாளியை கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்தவா் முரளி (44). இவா் ராஜாஜி காய்கறி சந்தையில் கடைகளுக்கு வரும் காய்கறி மூட்டைகளை இறக்கும் தொழிலாளி. இந்த நிலையில், காய்கறி சந்தை அருகில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவல் அறிந்த விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தாா். காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா்.
இந்த நிலையில், அதே ராஜாஜி காய்கறி சந்தையில் காய்கறி மூட்டைகளை இறக்கும் தொழிலாளியான காஞ்சிபுரம் அருகே பல்லவா் மேடு பகுதியைச் சோ்ந்த குமாா் (39)என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
இருவருக்கும் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோதிக்கொண்டதில் முரளியை குமாா் கொலை செய்திருப்பது தெரியவந்தது.