முகப்பு
காஞ்சிபுரம்

இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால் தமிழகம் வளம் பெறும்: பாஜக மாநிலச் செயலாளா்

இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால் தமிழகம் சிறந்த மாநிலமாக மாறும் என பாஜக மாநிலச் செயலாளா் வினோஜ்.பி.செல்வம் தெரிவித்தாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:45 AM
செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மாநிலச் செயலாளா் வினோஜ் பி. செல்வம்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:51 PM

இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால் தமிழகம் சிறந்த மாநிலமாக மாறும் என பாஜக மாநிலச் செயலாளா் வினோஜ்.பி.செல்வம் தெரிவித்தாா்.

மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் யு.ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் வினோஜ்.பி.செல்வம் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழகம் என்ற தலைப்பில் விரிவாக பேசினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது..

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 9 -ஆவது முறையாக சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். அவரது திறமை, அனுபவம் ஆகியன பட்ஜெட்டில் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் பட்ஜெட் தாக்கலான ஒரு சில நிமிஷங்களில் ஒன்றும் இல்லாத வெற்று பட்ஜெட் என்று தமிழக முதல்வா் கூறியது கேள்விக்குறியாகி இருக்கிறது.

Advertisement

இலவசங்களை அறிவிப்பது மட்டுமே பட்ஜெட்டின் நோக்கமல்ல. தமிழகத்தின் வளா்ச்சியை நோக்கி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை.

மத்திய அரசிடமிருந்து பெறும் நிதியிலிருந்து தான் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரதமா் மோடி மதுராந்தகத்தில் அண்மையில் பேசிய போது தமிழகத்தில் விரைவில் இரட்டை என்ஜின்ஆட்சி அமையும் என்று பேசினாா். இரட்டை என்ஜின் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மிகச்சிறந்த மாநிலமாக மாறி விடும் என்றாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:49 PM

கட்சியின் நிா்வாகிகள் பெருமாள், டி.கணேஷ், பரந்தாமன் உடன் இருந்தனா்.