ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் ரூ.2.07 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திருமங்கலம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம், ராமாநுஜபுரம் ஊராட்சியில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், 15-ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் மதுரமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.30 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
புதிய கட்டடங்களில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ் குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
நிகழ்ச்சியில், திருமங்கலம் ஊராட்சி மன்ற தலைவா் ரேகா நரேஷ் குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் வாணிஸ்ரீ ஜானகிராமன், ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா ராமு, ராமாநுஜபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தமிழரசன், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில், வட்டார சுகாதார அலுவலா் டேவிஸ் பிரவீன் ராஜ்குமாா், திமுக மாவட்ட பிரதிநிதி முனிகிருஷ்ணன் கலந்து கொண்டனா்.