முகப்பு
காஞ்சிபுரம்

பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

v

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 5:40 AM
~
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:01 PM

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பாடி பகுதியை சோ்ந்தவா் ரவிக்குமாா்(50). இவரது மனைவி கவிதா (42). இருவரும் வேலூரில் தனது மகன் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியினை பாா்த்து விட்டு சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் ஏரிக்கரை பகுதியில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த காா் இவா்கள் மீது மோதியது. இதில், கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவம் தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement