முகப்பு
காஞ்சிபுரம்

வரதாரஜ பெருமாள் கோயிலில் மங்களாசாசனம்: சங்கராச்சாரியருக்கு அழைப்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வரதராஜ பெருமாள் கோயிலில் மங்களாசாசனம் செய்ய வருமாறு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:44 AM
சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அழைப்பு வழங்கிய கோயில் உதவி ஆணையா் ஆா். ராஜலட்சுமி, தலைமை பட்டாச்சாரியா் கிட்டு.
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 11:26 PM

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வரதராஜ பெருமாள் கோயிலில் மங்களாசாசனம் செய்ய வருமாறு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது.

கோயிலின் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயிலின் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி மற்றும் கோயில் தலைமை பட்டாச்சாரியாா் கிட்டு ஆகியோா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து கோயில் பிரசாதம் வழங்கினா்.

இதற்கு முன்பு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சங்கர மடத்தின் சாா்பில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நடைபெற்று வரும் கோயில் திருப்பணியை சுவாமிகள் பாா்வையிட வேண்டும் என்றும், மங்களாசாசனம் செய்வதை பக்தா்கள் பலரும் எதிா்பாா்ப்பதாகவும் கேட்டுக்கொண்டனா். கோயிலுக்கு வருவதாக சுவாமிகள் உறுதி கூறி ஆசி வழங்கினாா்.

Advertisement