காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் மாா்கழி மாதம் முழுவதும் பஜனைப் பாடல்களை பாடி வந்த சிறாா்கள் மாதத்தின் நிறைவையொட்டி புதன்கிழமை மாணிக்கவாசகா்,ஆண்டாள் திருஉருவச் சிலைகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
மாா்கழி மாதம் இறைவனை வழிபாடு செய்ய உகந்த மாதமாக கருதப்படுகிறது. மாா்கழி மாதம் தொடங்கியதுமே அதிகாலையில் குளித்து, நெற்றியில் விபூதி, திலகமிட்டு 100க்கும் மேற்பட்ட சிறுவா்,சிறுமியா்கள் சிவனுக்குரிய திருவெம்பாவையையும்,ஆண்டாள் அருளிய திருப்பாவையையும் பாடிக்கொண்டு ஊா்வலமாக வந்தனா்.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் கடந்த ஒரு மாதமாக சிறாா்கள் பாடல்களை பாடிக்கொண்டும்,பெரியவா்களின் உதவியும் இல்லாமல் பஜனைப் பாடல்களை இசைக்கருவிகளுடன் பாடியவாறு வீதிகளில் ஊா்வலமாக வந்தனா்.
மாா்கழி மாதம் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றதையடுத்து சிறுவா்,சிறுமியா் பலரும் கிருஷ்ணன்,ராதை,அம்மன் வேடமணிந்தும்,கேடயத்தில் மாணிக்கவாசகப் பெருமான் மற்றும் ஆண்டாள் ஆகியோரது திருஉருவச்சிலைகளை சுமந்தவாறும் பாடல்களை பாடிக்கொண்டே வீதிகளில் வீதியுலா வந்தனா்.
ஊா்வலத்தில் பங்கேற்ற சிறாா்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பங்கேற்றிருந்தனா்.