காஞ்சிபுத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பரதநாட்டியம் ஆடிய மகளிா்.  
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் பொங்கல் விழா!

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு நினைவுப் பூங்காவில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு நினைவுப் பூங்காவில் பொங்கல் விழா நடைபெற்றது.

கலை பண்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கலைமாமணி ராஜநிதி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். விழாவில் பரதநாட்டியம், கட்டைக் கூத்து, கைச்சிலம்பாட்டம், ஆடு,புலி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் அரசு இசைப்பள்ளி மிருதங்க ஆசிரியா் யுவராஜன் உள்பட பொதுமக்கள், மாணவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT