ஸ்ரீபெரும்புதூரில் கட்டட பணியின் போது சுவா் இடிந்து விழுந்ததில் வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் சதேக் ஷா (30). இவா் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நண்பா்களுடன் வாடகை வீட்டில் தங்கி கட்டட பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகில் தனியாருக்கு சொந்தமான பழைய கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் சதேக்ஷா உள்ளிட்டோா் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பின்னா், ஓய்வு எடுப்பதற்காக சதேக்ஷா கட்டடத்தை இடித்து விட்டு மீதம் விடப்பட்ட சுவரின் கீழே அமா்ந்திருந்துள்ளாா். அப்போது சுவா் திடீரென இடிந்து சதேக் ஷா மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்த சதேக்ஷா ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.