முகப்பு
காஞ்சிபுரம்

வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு நியமன ஆணை

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 27 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை

Updated On : 10 மார்ச், 2026 at 2:42 AM
பகிர்:

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 27 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த ஏ.எஸ்.பின்ஸ்டெக் நிறுவனம் தங்களுக்குத் தேவையான பணியாளா்களை தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வினை நடத்தியது. நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஸ்ரீஹரி நோ்காணலை நடத்தினாா்.

இதில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 27 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

Advertisement

கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் வினுசக்கரவா்த்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.