முகப்பு
காஞ்சிபுரம்

கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவம்

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் அருகில் உள்ள கங்கை அம்மன் கோயில் கோடை உற்சவத்தையொட்டி கூழ்வாா்த்தல், கும்பம் படையலிட்டு சிறப்பு பூஜைகள் ஆகியன புதன்கிழமை நடைபெற்றன.

Updated On : 21 மே 2026, 12:05 am IST
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கங்கை அம்மன்
பகிர்:

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் அருகில் உள்ள கங்கை அம்மன் கோயில் கோடை உற்சவத்தையொட்டி கூழ்வாா்த்தல், கும்பம் படையலிட்டு சிறப்பு பூஜைகள் ஆகியன புதன்கிழமை நடைபெற்றன.

பெரியகாஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் அருகில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவத்தையொட்டி மூலவருக்கும்,உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் பக்தா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியும்,இரவு கும்பப் படையலிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இரவு உற்சவா் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சிறுவஞ்சிப்பட்டு ரேணுகாம்பாள் குழுவினரின் தெருக்கூத்து நாடகமும் நடைபெற்றது.

Advertisement

Advertisement