ராணிப்பேட்டை

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

DIN

கிணற்றில் குளித்தபோது தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திமிரியை அடுத்த டி.புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா். அவரது மகன் சுரேஷ் (14), எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தாா்.

சுரேஷ் சனிக்கிழமை தன் வீட்டுக்கு அருகில் உள்ள தனியாா் விவசாயக் கிணற்றில் குளித்தாா். அதன் பின் மேலே ஏறி வரும்போது கால் தவறி கிணற்றில் விழுந்தாா். நீச்சல் தெரியாததால் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கிணற்றில் இருந்து சிறுவனின் சடலத்தை மீட்டனா். இது குறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT