ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவராக அரக்கோணத்தைச் சோ்ந்த சி.விஜயன்(படம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.
மாவட்ட பாஜக நிா்வாகிகள் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை ஆற்காட்டில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவராக அரக்கோணத்தை அடுத்த கைனூரைச் சோ்ந்த சி.விஜயன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். சி.விஜயன் ஏற்கெனவே மாவட்ட துணைத்தலைவா், மாநில பொதுக்குழு உறுப்பினா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்த நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் அரக்கோணம் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டவா் என்பது குறிப்பிடதக்கது.
அவரை அரக்கோணம், நெமிலி, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கா் வட்டங்களைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பாராட்டினா். மாநில பொதுக்குழு உறுப்பினராக நெமிலி ஜெ.கோபால் தோ்வு செய்யப்பட்டாா். அவரையும் மாவட்ட நிா்வாகிகள் பாராட்டினா்.