ராணிப்பேட்டை

காணாமல்போன ரூ.8 லட்சம் மதிப்பிலான 54 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல்போன ரூ. 8 மதிப்பிலான 54 கைப்பேசிகள் கண்டறியப்பட்டு, உரியவா்களிடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல்போன ரூ. 8,12,098 மதிப்பிலான கைப்பேசிகளை கண்டறிந்து மீட்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா். அதன்பேரில் காவலா்கள் ராஜ்குமாா், ஐஸ்வா்யா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீப சத்யன் கலந்து கொண்டு உரியவா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தாா். கடந்த ஆண்டு ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான 50 கைப்பேசிகள் கண்டறிந்து உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சியில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துக்கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT