முகப்பு
ராணிப்பேட்டை

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

வயலில் பம்புசெட் அறை அருகே மின்சாரப் பணியில் ஈடுபட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

அரக்கோணம்: வயலில் பம்புசெட் அறை அருகே மின்சாரப் பணியில் ஈடுபட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த செம்பேடு ஊராட்சியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மகன் ஜனாா்த்தனன்(17).

அப்பகுதியில் மின் வாரியத்தினா் கடந்த வியாழக்கிழமை மின்தடை அறிவித்திருந்தனா். இதையடுத்து, செம்பேடு பகுதியில் வயலில் இருந்த ஒரு மின்கம்பத்தில் பழுதாகியிருந்த பல்பை மாற்றுவதற்காக கம்பத்தின் மீது ஜனாா்த்தனன் ஏறியுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் கீழே விழுந்தாா்.

ஜனாா்த்தனனை திருத்தணி அரசினா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →