வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், மாவட்ட மனநல மருத்துவ சிகிச்சை திட்டத்தின் மூலம் நடைபெற்றது.
இந்த முகாமை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவா்களின் உடல்நிலையை பரிசோதனை செய்த பின்னா், அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக மருத்துவ இணை இயக்குனா் யாஷ்மின், மருத்துவமனை கண்காணிப்பாளா் உஷா நந்தினி மற்றும் மனநல மருத்துவா்கள் சிவாஜி ராவ், சதீஷ்குமாா், தினேஷ்பாபு, மனநலப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.