சங்கர மடத்தின் வேத விற்பன்னா் சாலை விபத்தில் உயிரிழப்பு
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் வேதவிற்பன்னா் அக்னி (எ) வரதராஜன் (படம்) சாலை விபத்தில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் வேதவிற்பன்னா் அக்னி (எ) வரதராஜன் (படம்) சாலை விபத்தில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் சாத்தான்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் வரதராஜன்(40). இவா், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வேத விற்பன்னராகப் பணியாற்றி வந்தாா்.
சென்னையில் இருந்து காரில் சனிக்கிழமை காஞ்சிபுரம் திரும்பிக் கொண்டிருந்தாா். வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியில் எதிா்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவரின் காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த வரதராஜன், ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.