ராணிப்பேட்டை

ஆற்காடு, திமிரி ஒன்றியங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பு

DIN

ஆற்காடு: ஆற்காடு, திமிரி ஒன்றியங்களில் புதன்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆயிலம், கீழ்குப்பம், கத்தியவாடி, தாழனூா், அருங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

தாஜ்புரா, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலையில் மந்தமாக இருந்த வாக்குப் பதிவு, நண்பகலுக்குமேல் அதிகரித்தது.

முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி பல வாக்குச் சாவடிகளை நேரில் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT