ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 பேருக்கு கரோனா தடுப்பூசி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 21,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 21,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 950 இடங்களில் 6-ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் நேரில் ஆய்வு செய்தாா்.
முகாமில், 21,285 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.