ராணிப்பேட்டை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஆற்காடு நகர தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஐயப்பன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச்செயலாளா் கி.சுதாகா், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவா் என்.விஸ்வநாதன், மாவட்ட தலைவா் எஸ்.முஹமதுகாசிம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில் மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் விமலாவெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.கோபி, ஒன்றிய தலைவா் சிவசக்தி, செயலாளா் சம்பத், இளைஞா் அணிச் செயலாளா் என்.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT