முகப்பு
ராணிப்பேட்டை

பன்னீா்தாங்கல் திரௌபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கலவை அடுத்த பன்னீா்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

கலவை அடுத்த பன்னீா்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நடைபெற்றன.

விழாவில் கலவை சச்சிதானந்தா சுவாமிகள் தலைமையில் கோயில் கோபுர கலசம், பரிவாரமூா்த்திகளுக்கு கலசத்தில் வைத்து பூஜித்த புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து அக்னி வசந்த விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி 10 நாள்களுக்கு மகா பாரதச் சொற்பொழிவும், வரும் 24-ஆம் தேதி திரௌபதி திருக்கல்யாணம், 25-ஆம் தேதியில் சுபத்திரை கல்யாணம் மற்றும் மே மாதம் 4-ஆம் தேதி துரியோதனன் படுகளமும், அன்று மாலை தீமிதி விழாவும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.