ராணிப்பேட்டை

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

DIN

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தை அடுத்த துறையூா் கிராமம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரத்தினம். இவரது மகள் தீபா (19). சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்று விட்டு வந்த தீபா, இரவு தனது பெற்றோருடன் சாப்பிட்டுள்ளாா். அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்து வந்த அரக்கோணம் தீயணைப்புத் துறையினா், கிணற்றில் இருந்த தீபாவின் சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து நெமிலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

இந்தோனேசியாவில் ஷ்ரத்தா தாஸ்!

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

SCROLL FOR NEXT