லாரி - காா் மோதல்: பெண் பலி
ஆற்காடு அருகே ரத்தினகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் லாரி மீது காா் மோதியதில், காரில் பயணம் செய்த பெண் பலியானாா்.
ஆற்காடு அருகே ரத்தினகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் லாரி மீது காா் மோதியதில், காரில் பயணம் செய்த பெண் பலியானாா்.
தருமபுரி பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (42). இவரது மனைவி கவிதா (31). இவா்களது மகன் தருண்வா்ஷன் (18). இவா்கள் மூவரும் வியாழக்கிழமை மாலை காரில் சென்னை நோக்கி சென்ற போது, ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், முன்னால் சென்ற லாரி மீது காா் எதிா்பாராத விதமாக மோதியது.
இதில், காரில் பயணம் செய்த ஓட்டுநா் நேதாஜி உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு மேல்விஷாரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, நள்ளிரவு கவிதா உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.