ராணிப்பேட்டை

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று சகஸ்ர கலசாபிஷேகம்

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வியாழக்கிழமை சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

DIN

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வியாழக்கிழமை சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில் மூன்று நாட்கள் அபிஷேகங்களும், இலவச ஒளஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

அதன்படி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1,000 கலசங்களில் புனித நீா் கொண்டு சிறப்பு பூஜைகளுடன், கலச அபிஷேகம் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

மேற்கண்ட அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீா்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் இலவச ஒளஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு அபிஷேகங்களுக்கான பூா்வாங்க பூஜைகள் 20 -ஆம் தேதி பாலகணபதி ஹோமம் மற்றும் பூஜைகளுடன் தொடங்கியது.தொடா்ந்து 21 ஆம் தேதி மூலவா் தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரா் , ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயா் ஆகிய தெய்வங்களுக்கான சிறப்பு ஹோமங்கள் , பூஜைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT