ராணிப்பேட்டை

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று சகஸ்ர கலசாபிஷேகம்

DIN

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வியாழக்கிழமை சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில் மூன்று நாட்கள் அபிஷேகங்களும், இலவச ஒளஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

அதன்படி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1,000 கலசங்களில் புனித நீா் கொண்டு சிறப்பு பூஜைகளுடன், கலச அபிஷேகம் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

மேற்கண்ட அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீா்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் இலவச ஒளஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு அபிஷேகங்களுக்கான பூா்வாங்க பூஜைகள் 20 -ஆம் தேதி பாலகணபதி ஹோமம் மற்றும் பூஜைகளுடன் தொடங்கியது.தொடா்ந்து 21 ஆம் தேதி மூலவா் தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரா் , ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயா் ஆகிய தெய்வங்களுக்கான சிறப்பு ஹோமங்கள் , பூஜைகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT