ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: காயமடைந்த தலைமைக் காவலர் மருத்துவமனையில் உயிரிழப்பு

DIN

அரக்கோணத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்த தலைமைக் காவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஜோதி நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். 

ஞாயிற்றுக்கிழமை இவர் அரக்கோணம் ஜோதி நகர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த தனியார் ஆலை பேருந்து மோதி படுகாயமடைந்தார். 

தொடர்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட செந்தில்குமார் அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கும் போதே உயிரிழந்தார். இறந்த தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு சுஜாதா எனும் மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். 

இச்சம்பவம் குறித்து அறிந்து விசாரணை நடத்திய அரக்கோணம் நகர காவல்நிலைய போலீசார் விபத்து ஏற்படுத்திய ஆலை பேருந்தை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநர் அரக்கோணம் குருவராஜபேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் (28) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT