முகப்பு
ராணிப்பேட்டை

தன்வந்திரி பீடத்தில் விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் வருஷாபிஷேகம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 21அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:14 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 21அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 21அடி உயரத்தில் நின்ற கோலத்தில், 30 டன் எடையில் மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் நுழைவு வாயில் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரதிஷ்டை செய்யப்பட்டதின் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

இதையொட்டி, கருட பகவானுக்கு பல்வேறு ஹோம திரவியங்களைக் கொண்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னா், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள், விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளை நடத்தி வைத்தாா்.

முன்னதாக ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருந்த பெண் பக்தா்கள், கருடா் வருஷாபிஷேக விழாவையொட்டி கருட பகவான் பாடல்கள் பாடி பஜனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.