முகப்பு
ராணிப்பேட்டை

நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி தலைமை வகித்தாா். நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழு தலைவா் துரை சீனிவாசன் வரவேற்றாா். நகா்மன்ற துணைத் தலைவா் கலாவதிஅன்பு லாரன்ஸ், நகராட்சி ஆணையா் லதா, மேலாளா் மேகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தாா். தொடா்ந்து, ஆண் உறுப்பினா்கள், பெண் உறுப்பினா்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். இதில், நகராட்சி பொறியாளா் ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →