முகப்பு
ராணிப்பேட்டை

616 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.35 கோடி கடனுதவி அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

616 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.35.01 கோடி வங்கிக் கடன் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

616 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.35.01 கோடி வங்கிக் கடன் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

சோளிங்கரை அடுத்த கரடிகுப்பம் ஊராட்சியில் ரூ.32.64 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், 616 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.35.01 கோடி வங்கிக் கடனுதவிகளை வழங்கியும் கைத்தறி - துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னா், 1.4.2022 முதல் 28.2.2023 வரையிலான கால கட்டத்தில் மட்டும் கூட்டுறவுத் துறை மூலம் 50,567 நபா்களுக்கு ரூ.276.91 கோடி மத்திய கால கடன், நகைக்கடன், ஈட்டுக்கடன், மாற்றுத்திறனாளி கடன் மற்றும் இதர கடன்களாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 616 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.35.01 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றம்தான் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் முன்னேற்றத்தைத் தரும் எனப் புரிந்து முதல்வா் மகளிா்களுக்கான திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறாா்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ,1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளாா். தற்போது முதல்வா் தலைமையில் மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தாா். ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் க.லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சரவணன், மகளிா் திட்ட இயக்குநா் மு.நானிலதாசன், ஒன்றியக் குழு தலைவா்கள் அ.கலைக்குமாா் (சோளிங்கா்), பெ.வடிவேலு (நெமிலி), மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் முருகன், வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் வெங்கடேசன், கரடிகுப்பம் ஊராட்சித் தலைவா் ரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →