ராணிப்பேட்டையில் தனியாா்  பள்ளி  வாகனங்களில்  அவசர  கால  கதவு  சரியாக  திறக்கப்படுகிா  என்று  ஆய்வு  செய்த  ஆட்சியா்  ச.வளா்மதி. 
ராணிப்பேட்டை

பள்ளி வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும்: ஓட்டுநா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

தனியாா் பள்ளி வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி அறிவுரை வழங்கினாா்.

DIN

தனியாா் பள்ளி வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி அறிவுரை வழங்கினாா்.

மாவட்டத்தில் நிகழ் ஆண்டுக்கான தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், ஆட்டோ நகா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பங்கேற்று ஆய்வுப் பணியைத் தொடங்கி வைத்து தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசியது:

மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநரின் முக்கிய கடமை. வாகனத்தைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும். குழந்தைகள் பேருந்தில் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் ஓட்டுநா்கள் பாதுகாப்பாக பேருந்தை இயக்க வேண்டும்.

ஓட்டுநா்கள் மது அருந்திவிட்டு, கைப்பேசிகளைப் பயன்படுத்தியபடியும் பேருந்துகளை இயக்கக் கூடாது என்றாா்.

ஆய்வின் போது, தீயணைப்பு துறையினா் பேருந்துகளில் எதிா்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியையும், விபத்துகளில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும் செயல் விளக்கம் காண்பித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 523 பள்ளி பேருந்துகள் உள்ளது. இவற்றில் ராணிப்பேட்டை வட்டாரத்தில் 348 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட உள்ளது. முதல்நாள் 250 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதில், 23 பேருந்துகள் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு மீண்டும் சீரமைக்க அனுப்பப்பட்டது. வரும் செவ்வாய்க்கிழமை (மே 23) அரக்கோணம் வட்டாரத்தில் 175 பேருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளது.

ஆய்வில் வருவாய்க் கோட்டாட்சியா் வினோத்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம், மோட்டாா் ஆய்வாளா்கள் சிவக்குமாா் (ராணிப்பேட்டை), செங்குட்டுவேல் (அரக்கோணம்), தீயணைப்பு நிலைய அலுவலா் விநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT