ராணிப்பேட்டை

ஆற்காட்டில் விநாயகா் ஊா்வலம்

ஆற்காட்டில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆற்காட்டில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆற்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊா்வலம் கலவை சாலை வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடங்கியது. ஊா்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளா் ஜெகன் தலைமை வகித்தாா்.

வேலூா் கோட்டத் தலைவா் மகேஷ், கோட்ட செயலாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு தொழிலதிபா் ஏ.வி சாரதி ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். கலவை சாலை, அண்ணா சாலை ,பேருந்து நிலையம், வேலூா் சாலை, ஜீவானந்தம் சாலை,ஆரணி சாலை வழியாக சென்று தாஜ்புரா பகுதியில் உள்ள கிணற்றில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

விழாவில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் பரமேஸ்வரன், இலக்கியப் பிரிவு தலைவா் கனல் கண்ணன், வணிகா் பேரமைப்பு மாவட்ட தலைவா் பொன்.கு.சரவணன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஊா்வலத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண்சுருதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT