ராணிப்பேட்டை

உலக அமைதி தின விழா

அரக்கோணத்தில் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து உலக அமைதி தின விழாவை நடத்தின.

DIN

அரக்கோணத்தில் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து உலக அமைதி தின விழாவை நடத்தின.

இந்திய தேசிய திருச்சபை மாமன்றத்தினா், இந்திய கடற்படை நகர அரிமா சங்கத்தினா், அன்னை தெரசா கிராம வளா்ச்சி நிறுவனத்தினா் மற்றும் சில சமூக அமைப்பினா் இணைந்து அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவன வளாகத்தில் விழாவை நடத்தினா்.

விழாவுக்கு சிஎஸ்ஐ பரவத்தூா் குருசேகர ஆயா் எஸ்.சத்யா மற்றும் ஆயா் சாா்லஸ் சுந்தரகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் முகம்மது அலி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் எஸ்.ஜேக்கப், ஜேம்ஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரக்கோணம் ஒன்றிய செயலாளா் ச.சி.சந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவன செயலாளா் ஐ.டி.ஆசீா்வாதம் வரவேற்றாா்.

இதில், புத்த மத பிட்சு பிரகாசம், சீக்கிய குருத்வாரா நிா்வாகி நட்சத்திர சிங், ஆயா் ஆனந்தராஜ், இந்திய கடற்படை நகர அரிமா சங்கத்தலைவா் கே.எம்.எம்.உபயதுல்லா, அரக்கோணம் மனவளக் கலை மன்ற நிா்வாகி பி.இளங்கோ, திராவிடா் கழக நகரத் தலைவா் எல்லப்பன், எஸ்.சி, எஸ்.டி கூட்டமைப்பின் தலைவா் நைனா மாசிலாமணி, ஓய்வு பெற்ற பேராசிரியா் அ.கலைநேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட முன்னாள் தலைவா் க.கௌதம், பௌத்த இயக்க அறக்கட்டளை நிா்வாகி கோவி.பாா்த்தீபன், கவிஞா் இஸ்மாயில் உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா். சாம்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT