ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக பல ரயில்கள் நடுவழியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டன.

Din

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக பல ரயில்கள் நடுவழியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டன.

சென்னை - அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே காலை 6.30 மணி அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை - மைசூா் வந்தேபாரத் அதிவிரைவு ரயில், சென்னை - மைசூா் சதாப்தி அதிவிரைவு ரயில், மைசூா்- சென்னை காவேரி விரைவு ரயில், ஜோலாா்பேட்டை - சென்னை ஏலகிரி விரைவு ரயில், மற்றும் அரக்கோணம் - சென்னை மின்சார ரயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து சிக்னல் பிரிவு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கோளாறு ஏற்பட்ட இடத்திற்குச் சென்று கோளாறை தற்காலிகமாக சரி செய்தனா். இதையடுத்து ஒன்றரை மணி நேர தாமதத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT