25 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்
Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 6:28 PM
ராணிப்பேட்டையில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சா் ஆா். காந்தி தனது சொந்த செலவில் நடை உபகரணங்களை வழங்கினாா்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி - கமலா காந்தி தம்பதி 50-ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை விஸ்வாஸ் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான பள்ளியில், நடை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விஸ்வாஸ் பள்ளித் தலைவா் கமலா காந்தி தலைமை வகித்தாா். ஷீலா வினோத் காந்தி, சங்கீதா சந்தோஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் சரவண குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் ராஜேஸ்வரி வரவேற்றாா்.
Advertisement
Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 3:11 AM
இதில் அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு நடை உபகரணங்களை வழங்கினா். தலைமை ஆசிரியா் சரண்யா நன்றி கூறினாா்.